திருவள்ளூர்: தொழிலதிபர்கள் திருவேற்காடு ப.கோவிந்தசாமி, ப.சக்கரவர்த்தி, ப.கோபி ஆகியோரின் சகோதரரும், பெருமாளகரம் கஜபதி குரூப் ஆப் கம்பெனிஸ் உரிமையாளருமான சூரா. எஸ்.சிட்டிபாபு நாயுடு உடல் நலக்குறைவால் காலமானார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் விசாரித்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அமைச்சர்கள் பா.பெஞ்சமின், க.பாண்டியராஜன், ஐஏஎஸ் அதிகாரி முரளி, எம்எல்ஏக்கள் ப.ரங்கநாதன், எம்.கே.மோகன், எஸ்.ஏ.கல்வி குழுமங்களின் நிர்வாகிகள் டி.பரந்தாமன், டி.தசரதன், ப.வெங்கடேஷ் ராஜா, மதிமுக மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், மாவட்ட அவைத்தலைவர் பூவை மு.பாபு, சோரஞ்சேரிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.